Saturday 9 April 2016

புரிதலற்ற தேடல்கள்




கதவிடுக்கில் சிக்கிக் கொள்ளும் விரலைப் போல
சரிக்கும் தவறுக்குமான குறுகிய இடைவெளியில் எப்பொழுதும் சிக்கித்தவிக்கிறது மனம்

கோணல் முற்றத்து ஏழைக் கிழவனின்
வேனில் காலத்து வாட்டும் நினைவுகளாய்
கானல் கனவுகள் மனதில் பிசுபிசுக்கின்றன

புதையுண்டப் பொருளுக்கு அடையாளம் வைக்கிறான் சிதறுண்ட மணலில் சிறுவன்

கட்டற்ற வானில் சிறைகொண்ட மனதிற்கு
திக்கற்ற முகில்களின் நடுவே கறையிடுகிறேன் நான்

பளிச்சென்று எனைப்பார்த்துச் சிரித்தடங்குகிறது மின்னல்


No comments:

Post a Comment