கதவிடுக்கில் சிக்கிக் கொள்ளும் விரலைப் போல
சரிக்கும் தவறுக்குமான குறுகிய இடைவெளியில் எப்பொழுதும் சிக்கித்தவிக்கிறது மனம்
கோணல் முற்றத்து ஏழைக் கிழவனின்
வேனில் காலத்து வாட்டும் நினைவுகளாய்
கானல் கனவுகள் மனதில் பிசுபிசுக்கின்றன
புதையுண்டப் பொருளுக்கு அடையாளம் வைக்கிறான் சிதறுண்ட மணலில் சிறுவன்
கட்டற்ற வானில் சிறைகொண்ட மனதிற்கு
திக்கற்ற முகில்களின் நடுவே கறையிடுகிறேன் நான்
பளிச்சென்று எனைப்பார்த்துச் சிரித்தடங்குகிறது மின்னல்
No comments:
Post a Comment