Monday 27 December 2010

கவியின் காதலி



யாரடி நீ எனக்கு?

எனை பார்த்து நீ கேட்கிறாய்.

ஆம்

உன் கன்னக்குழிக்குள்
என் எண்ணப்படகினில் வலம் வந்திருக்கிறேன்

உன் மின்னல் சிரிப்பினில்
எனை வண்ணப்புகைப்படம் பிடித்திருக்கிறேன்

உன் ஓரப்பார்வைக்கு
என் வீர பராக்கிரமம் காண்பித்திருக்கிறேன்

உன் துளிச் சிந்தனைக்கு
என் களி தீர இன்முகம் விரித்திருக்கிறேன்

உண்மைதான்
யாரடி நீ எனக்கு?

கல்லூரியில் நீயில்லா
வகுப்பறை மன்றம்
எனக்கு அலையில்லா
கடற்கரையாய் தோன்றும்

என்னை பாராமல் நீ
சிரம் தாழ்த்தும் தருணங்கள்
விண் மகள் மழையினை
மண் வீழ்த்தும் மரணங்கள்

உண்மைதான்.
யாரடி நீ எனக்கு?

என் கிறுக்கல்கள் காகிதங்களில் காயங்களாய்
என் உளறல்கள் தத்துவங்களின் சாயல்களாய்
மாறியது உன்னால்

உண்மைதான்
யாரடி நீ எனக்கு?

உந்தன் நினைவுகள்
என் மூளையின் அதீத ரேகை பதிவுகள்

நீ பேசிய வார்த்தைகள்
என் தனிமைச் சிறைத் தோழர்கள்

எல்லாம் உண்மைதான்.

ஆனால் சற்று நினைத்து பார்

உன் அன்பிலே கொள்ளை போனவன் நான்
களவாண்டவள் நீ கூற வேண்டுமடி

யாரடி நான் உனக்கு?

No comments:

Post a Comment