Thursday 13 January 2011

அவள் பெயர் மானஸா




மௌன மொழியாள் 
செவ்விதழில் தேன் சொரிவாள்
கருநீல விழியாள் 
சிரிப்பதனில் உளம் கவர்வாள்

வாகை மலராள்
தோகையில்லா மயிலாள்
கமல நிறத்தாள்
பார்க்க கண் பறித்தாள்

சிந்தைச் செருக்குடையாள் 
உயரிய மாண்புடையாள்
அன்னத்தை ஒத்த நடையாள்
அகமதில் தீரம் தரித்தாள்

மனம் ஏங்கும் சிற்றிடையாள்
முத்தம் தந்து மயக்குவாள்
பிறர் என்றால் தயங்குவாள்
என் தோளில் உறங்குவாள்

செல்ல அடி கொடுப்பாள்
அழக் கண்டு பதறுவாள்
கண்டவுடன் ஆர்ப்பரிப்பாள்
கண்கள் பனிக்க விடைகொடுப்பாள்

ஒரு நொடியேனும் நில்லாள்
ஆடிப்பாடி இன்புருவாள்
இல்லமெங்கும் நிறைந்தாள் இல்லையெனில் ஏங்க வைப்பாள்

அவள் பெயர் மானஸா!!!

2 comments:

  1. ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடு. <3 அழகு

    ReplyDelete
  2. மிக்க நன்றி அக்கா🙏

    ReplyDelete