Monday 31 January 2011

ஏன்?

அழைத்திட பெயர்
திணைப்படி உயர்
பகுத்திட ஆண்
முகவரிக்கு முகம்
இவை போதாதா என்னை இனம்காண?

உரையாட மொழி
உணர்ந்திட மனிதம்
உறவாட அன்பு
உறுத்தாத பண்பு
இவை போதாதா என்னுடன் பழக?

கருமத்தில் நேர்மை
கருத்தில் செறிவு
அறிவின் திறன்
அகத்தில் தீரம்
இவை போதாதா கண்ணியமாய் வாழ?

பின் எதற்காக இந்த சாதி?

என் சமூகத்தால் என் மீது திணிக்கப்பட்ட ஒன்றை
நான் எதற்காகச் சுமக்க வேண்டும்?

என்னை விட
என் சமூகத்திற்குத் தான்
மிகுந்த அக்கறை போலும்

என் சாதியைப் பற்றி

நான் கேள்விப்பட்டதோடு சரி.....

No comments:

Post a Comment