Saturday 12 February 2011

கிறுக்கல்

கவிஞனாம் அவன்.
அவன் கவிதை எழுதத் துணிகிறான்

கருத்துக்களுக்கு மணமுடிக்க
வார்த்தைகளை மாலையாய்க் கோர்க்கிறான்
அந்தோ
ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்ட எழுத்துக்கள்
தனித்தனியே

மோனைகள் மௌனமாய்ப் போர்புரிய
எதுகையோ ஓடுகிறது சிரம் தெறிக்க

எதற்கிந்த சிரமம்?
நவயுகக் கவிதை ஒன்று முளைத்தது

அதையோ
தமிழென்று உணர்ந்துக்கொள்ள மிகக் கடினம்
இலக்கணமோ பிழையுடனே இழையோடுகிறது
அதில் ஒரு தலைக்கனம்
அவனுக்கு

தலைப்பிட்டான் "கிறுக்கல்" என.
வெறும்
கிறுக்கல்களாய் காகிதத்தில்....


No comments:

Post a Comment